2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி எமது மக்களை சுய பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரது ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமானது' இவ்வாறு   ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே, அவர்  மேற்கண்டவாறு  கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  'கடந்தகால தவறான அரசியல் வழிநடத்தல்களால்; எமது சமூகம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. ஆனாலும், போருக்கு பின்னரான தற்போதைய அமைதிச் சூழலில் மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்தகாலங்களில் என்ன நேரத்தில் என்ன நடக்குமென்று தெரியாத அங்கலாய்ப்புடனும் ஏக்கத்துடனும் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்றுள்ளதான சூழல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோற்றுப்போனது தவறான அரசியல் வழிநடத்தலேயன்றி, எமது சமூகமல்ல  என்பதை உணர்ந்துகொண்டவர்களாக எதிர்காலங்களில் விழிப்புடன் மக்கள் செயற்பட வேண்டும்.

எனவே மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களுக்கான வாழ்வாதாரம் பெற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

இந்த நிலையில்,  சரியான அரசியல் வழிநடத்தலின் ஊடாகவே மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அதற்காக நாம் எக்காலத்திலும் உழைத்து வருகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X