2025 ஜூலை 09, புதன்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

George   / 2015 மே 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை(08) உத்தரவிட்டதாக பருத்தித்துறை பொலிஸார் சனிக்கிழமை(09) தெரிவித்தனர்.

இராணுவத்தினர் வழங்கிய தகவலை அடுத்து, சுப்பர் மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்த பருத்தித்துறை பொலிஸார், கொழும்புக்கு கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்த 19 கிலோகிராம் கஞ்சாவினை மீட்டிருந்தனர்.

அத்துடன் 45 வயதுடைய சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபரை, விசாரணைகளின் பின்னர், வெள்ளிக்கிழமை (08) மாலை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இன்பருட்டி பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அந்நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்ஃபர் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .