2025 ஜூன் 28, சனிக்கிழமை

பளை பொது விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது

Gavitha   / 2015 ஜூன் 21 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேசத்தின் பொது விளையாட்டு மைதானம் நெல்சிப்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப் பள்ளி பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனரமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரதேச சபையின் தலைமைக்காரியாலயத்துக்கு அண்மையில் வசதிகள் குறைந்த நிலையில் இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

மக்களின் கோரிக்கையையடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனரமைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .