2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆலயத்தில் சங்கிலி அறுக்க முற்பட்ட இரு யுவதிகள் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (24) சங்கிலி அறுக்க முற்பட்ட இரண்டு யுவதிகளை பிடித்த ஆலய பரிபாலன சபையினர், தங்களிடம் ஒப்படைத்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். தென்பகுதியில் இருந்து வருகை தந்த இரு யுவதிகளே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.

ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இரண்டு யுவதிகளும் பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளையில், அங்கிருந்த பொதுமக்களால் பிடிக்கப்பட்டு ஆலய பரிபாலன சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .