ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 29 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

புனித நோன்புப் பெருநாளையொட்டி, புத்தளம், கொழும்புத் திடலில் இடம்பெற்று வரும் களியாட்ட நிகழ்வுகள், எதிர்வரும் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் புத்தளம் 4ஆம் வட்டார அமைப்பாளர் எம்.ஏ.அஸ்கீனின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் குறித்த களியாட்ட நிகழ்வில், புத்தளம், கற்பிட்டி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர்.
குறித்த களியாட்ட நிகழ்வில் கிணறு போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள குழிக்குள் மோட்டார் சைக்கிள் ஓடுதல், இலத்திரனியல் விமானத்தில் பறத்தல், குதிரை சவாரி மற்றும் இலத்திரனியல் ரயிலில் பயணம் செய்தல் என்பனவற்றுடன், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களைக் கவரும் சாகாச நிழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தனித்தனியே நுளைவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025