Princiya Dixci / 2016 நவம்பர் 19 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
வடமேல் மாகாண சபையினால் இலங்கை அதிபர் சேவை தரம் 3இற்குப் புதிய அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் 455 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புத்தளத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு, 21 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களுகே கடத்த புதன்கிழமை (16) புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாண முதலமைச்சர் தர்மஸ்ரீ தஸாநாயக்க உள்ளிட்ட, மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டர்.
அதிபர் வெற்றிடமுள்ள மற்றும் அதிபருக்கான தரமின்றி தற்காலிக அதிபராகக் கடமையாற்றி வருகின்றன பாடசாலைகளுக்கே புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
9 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
24 minute ago