Princiya Dixci / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
எம்.யூ.எம். சனூன்
தமக்கான சம்பள நிலுவைகளை உடனடியாக வழங்கக்கோரி புத்தளம் தள வைத்தியசாலையின் சகல பிரிவுகளையும் சேர்ந்த வைத்தியத்துறை சார்ந்தவர்கள், இன்று புதன்கிழமை (21) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு மாத காலமாக தமக்கு வழங்கப்படவேண்டிய மேலதிக நேர கொடுப்பனவுகள், விடுமுறை தினங்களின் சேவை கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க கோரியும், சம்பள அதிகரிப்பை கோரியும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு, இவர்கள் இந்த ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட சகல பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
.jpg)
.jpg)
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago