2025 மே 05, திங்கட்கிழமை

மனைவியை கொன்று புதைத்தவருக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணியான தனது மனைவியைக் கொண்டு புதைத்த குற்றச்சாட்டில் இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15), மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும், மனைவியின் சடலத்தை மறைக்க முற்பட்டமைக்காக ஏழு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் இவருக்கு விதிக்கப்பட்டது.

2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்று இக் கொலைச் சம்பவத்தையடுத்து, இவருக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அவர் குற்றவாளியொன நிரூபிக்கப்பட்டதையடுத்து,  தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X