Kogilavani / 2017 மார்ச் 24 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்
டெங்கிலிருந்து பொதுமக்களை குறிப்பாக முன்பள்ளி மாணவர்களை பாதுக்காக்கும் நோக்கில், விழிப்புணர்வு ஆலோசனை கூட்டமொன்று, புத்தளம் சவீவபுரம் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில், நேற்று வியாழக்கிழமை(23) காலை இடம்பெற்றது.
புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புத்தளம் நான்காம் வட்டாரம், நூர் நகர் மற்றும் கடையாக்குளம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் பலரும் கலந்துகொண்டனர்.
டெங்கு நோயின் தாக்கங்கள் மற்றும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகள் தொடர்பாக, புத்தளம் நகர சபை பிரதம நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் இதன்போது விரிவாக விளக்கப்படுத்தினார்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago