2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; 8 பேர் காயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் - அனுராதபுர வீதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதினால் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பருத்திதுறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு சென்ற பஸ் ஒன்றும் மோதியதினாலேயே மேற்படி அனர்த்தம் நேற்று இரவு ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்;தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X