2025 மே 22, வியாழக்கிழமை

மழை காரணமாக 5 குளங்களின் வான் கதவுகள் திறப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

ரஜரட்ட பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள 11 குளங்களில் 5 குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

பதவிய குளத்தின் 1 வான் கதவும் வாஹல்கட குளத்தின் 3 வான் கதவுகளும் ராஜாங்கனை குளத்தின் 2 வான் கதவுகளும் நாச்சியாதீவு குளத்தின் 2 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதோடு ஹுருளுவாவியிலிருந்து 6 அங்குல உயரத்திற்கு வான் நீரும் வெளியேறுவதாக அநுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர் லலித் த அல்விஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்தோடு ஏனைய விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X