2025 மே 23, வெள்ளிக்கிழமை

அநுராதரபுரம், பொலன்னறுவை சிறுநீரக பிரச்சினை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜய

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம்,பொலனறுவை மாவட்டங்களில் மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரகப் பிரச்சினை குறித்து தேசிய, வெளிநாட்டு   விசேட வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் அறிக்கைகள் இதுவரை வெளியிடாமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கோரியுள்ளார். 

இது தொடர்பாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளதாவது:

'நீண்ட காலமாக தொலைக்காட்சியில் மருத்துவ நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் என்ற வகையிலும் இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகிறேன்.

இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் 15 – 70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம்பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கும் மேற்பட்டோரே இந்த நோயின் தாக்கத்திற்கு அதிகளவில் உள்ளாகியுள்ளனமை தெரியவருகின்றது.

இந்த நோயின் தொற்றின் வேகத்தையும், நிலையையும் அறிந்துகொண்ட களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர்கள், முன்னணி மருத்துவ குழுக்களினால் இந்த நோயின் தாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக, இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் பலர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சிறுநீரக நோய் குறித்து சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராக கடமைபுரிந்து, தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பில் உள்ளக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக செயற்படும் இலங்கை விசேட வைத்திய நிபுனரான பேராசிரியர் சாந்தி மென்டிஸின் வேண்டுகோளுக்கிணங்க, உலக சுகாதார அமைப்பினால் இந்த சிறுநீரக நோய் தொடர்பிலான 3 அறிக்கைகளை பாரிய ஆராய்ச்சியின் பின்னர் முன்வைத்திருந்தது.

இதின் முதலாவது அறிக்கை 2011 ஜுன் மாதத்திலும், இரண்டாவது அறிக்கை 2011 ஒக்டோபர் மாதத்திலும், மூன்றாவது அறிக்கை 2012 பெப்ரவரி மாதத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவச் சபை ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன்பிரகாரம் குறித்த அறிக்கைகளில் உலக சுகாதார அமைப்பானது இந்நோயை எவ்வாறு இனங்காண்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டிருந்தது.

இந்த நோய் மேலும் பரவுவததை தவிர்க்க தாமதமின்றி இந்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதைப் பார்க்கிலும் அந்த நோயை இல்லாதொழிப்பதே மேல் ஆகும். என்னால் நடத்தப்பட்டுவரும் உலக சாதனை படைத்த தொலைக்காட்சி மருத்துவ நிகழ்ச்சி ஊடாக நோய்த்தடுப்பு பற்றியே அதிகளவில் தெரிவிக்கின்றேன்.

துரதிஷ்டவசமாக உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பின் குறித்த 3 அறிக்கைகளிலும் நோய்த்தடுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோயானது வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவில் பரவிவருகின்றது என்பதை தற்போதுள்ள அரசாங்கம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததில்லை.

எனவே இப்போதாவது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட 3 அறிக்கைகளிலுமுள்ள பரிந்துரைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையில் உள்ளவற்றை தாமதமாகியும் நடைமுறைப்படுத்தாவிட்டால் அப்பாவி மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு வழி கிடையாது. மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.

விருத்தியாகும் சிறுநீரக நோயை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சிகிச்சை நிலையங்களை திறந்துவைப்பதில் என்ன பலன்? எதிர்காலத்தில் இந்நோய் விருத்தியாகாமலிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தற்காலத்தில் பாரிய ஆட்கொல்லி நோயாக தோன்றியுள்ள இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்."

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X