2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலை திறப்பு

Kogilavani   / 2013 ஜூன் 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் நகர சபையினால் அமைக்கப்பட்ட மாதிரி பாலர் பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் அஷ்ரப் பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது.

இத் திறப்பு விழா நிகழ்வில், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாலர் பாடசாலையினைத் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் போது, புத்தளம் நகர சபையினால் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் நகர சபையின் செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X