2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடற் படையினரின் சீருடைகளை வைத்திருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Super User   / 2013 ஜூலை 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான பல சீருடைகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டணையும் 15,000 அபராதமும் விதித்து வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார தீர்ப்பளித்தார்.

விதிக்கப்பட்ட சிறைத் தண்டணையை 5 வருடத்திற்கு நீதவான் ஒத்திவைத்தார். ஹொரவப்பொத்தனை வீதி, மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆந் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் சந்தேக நபர் கடற்படைக்குச் சொந்தமான 16 சீருடைகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .