Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Freelancer / 2025 மார்ச் 17 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஒடோமொபைல் போக்குவரத்து வணிகத் துறையில் இந்த மாதம் புதிய திறன் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்கள் (SSW) திட்டத்தின் கீழ் ஜப்பானில் வேலை தேடும் நபர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த சேர்க்கையுடன், செவிலியர் பராமரிப்பு, உணவு சேவை, விவசாயம், கட்டுமானம், விமான நிலைய தரை கையாளுதல், தங்குமிடத் தொழில் மற்றும் கட்டிட சுத்தம் செய்தல் உள்ளிட்ட எட்டு துறைகளில் திறன் சோதனைகள் கிடைக்கின்றன.
ஒடோமொபைல் போக்குவரத்து வணிகத் துறை மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: லொறி ஓட்டுனர், டெக்ஸி ஓட்டுனர் மற்றும் பேருந்து ஓட்டுனர். இந்தத் துறையில் வேலைக்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் ஜப்பானிய மொழித் திறன் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். லொறி ஓட்டுனர்களுக்கு N4 ஆகவும், டெக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுனர்களுக்கு N3 ஆகவும் மொழித் திறன் தேவைப்படுகிறது.
ஜப்பானில் பணிபுரிய இந்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பல திறமையான மற்றும் ஆர்வமுள்ள இலங்கையர்கள் வருவார்கள் என்று ஜப்பான் தூதரகம் நம்புகிறது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து வருட காலப்பகுதியில் ஒடோமொபைல் போக்குவரத்து வணிகத் துறை 24,500 வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பை வலுப்படுத்துவதற்கும் தூதரகம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
15 Jun 2025
15 Jun 2025