Editorial / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரியின் வகை 1 6% வரிக்கு உட்பட்டது இதன்படி மாதம் 150,000 சம்பளம் பெறுபவருக்கு 100% வரிவிலக்கு உண்டு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
250,000 சம்பளம் பெறுபவர் 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.
300,000 சம்பளம் பெறுபவர் 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.
350,000 சம்பளம் பெறுபவர் 25.5% வரியிலிருந்து விலக்கு
அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Feb 2026