2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜூன் மாதத்தில் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் மொத்த இறக்குமதி செலவீனம் போன்றன கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பான பெறுமதியை பதிவு செய்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஜுன் மாதத்தில் ஏற்றுமதி மூலமான வருமானம் 6.8 வீதத்தால் அதிகரித்து 807 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இறக்குமதிகள் மீதான செலவீனம் 15.3 வீதத்தால் அதிகரித்து 1636 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜுன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியில் அதிகளவு பங்களிப்பை ஆடை உற்பத்திகளும், தேயிலையும் வழங்கியிருந்தன.

மொத்த ஏற்றுமதியில் 40 வீதமான பங்களிப்பு ஆடை உற்பத்திகளின் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்டிருந்தது. இயந்திரங்கள் மற்றும் இயந்திர சாதன பொருட்களின் ஏற்றுமதி ஜுன் மாதத்தில் 25வீதத்தால் அதிகரித்திருந்தது. இறப்பர் சார்ந்த உற்பத்திகளும் 7.7 வீதத்தால் அதிகரித்திருந்தன.

தேயிலை ஏற்றுமதி ஜுன் மாத்தில் 14.5 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வாசனைத்திரவியங்களும் ஏற்றுமதி பெறுமதி அதிகரிப்பில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தன.

ஜுன் மாதத்தில் அதிகளவு பெற்றோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததன் காரணமாக மொத்த இறக்குமதியில் அதிகரிப்பு பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜுன் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் பெறுமதி 9வீதத்தால் அதிகரிப்பை பதிவு செய்த போதிலும், முதல் அரையாண்டில் இந்த பெறுமதி சரிவை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வாகனங்கள், ஆடைகள் போன்றனவும் ஜுன் மாதத்தில் மொத்த இறக்குமதி பெறுமதி அதிகரிப்பில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .