2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 நவம்பர் 10 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
கொழும்பு பங்குச்சந்தை முன்னைய வாரத்தை விட உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான கணக்கறிக்கைகள் வெளியாகிய வண்ணமுள்ளமை, குறிந்த நிறுவனங்களின் மீதான பங்குகளில் உயர்ந்த ஈடுபாட்டை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. மேலும், வஙகி வட்டி வீதங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றமையும் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் நாட்டம் அதிகளவில் காணப்படுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,416.15 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4128.3 ஆகவும் பதிவாகியிருந்தன. வியாழக்கிழமை விடுமுறை காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் கடந்த வாரம் நான்கு நாட்களுக்க மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
நவம்பர் 03ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 8,301,531,280 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 44,244 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 42,101 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,143 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
திங்கட்கிழமை
கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் பங்களிப்பின் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்தன. புரள்வு பெறுமதி 1.6 பில்லியன ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வொரன்ட்கள் 23 மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், அக்மி பிரின்டிங் அன்ட் பக்கேஜிங் உரிமை, ஹேலீஸ் எம்ஜிரி நிட்டிங் மில்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது டோக்கியோ சீமெந்து, ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் ரேணுகா அக்ரி பூட்ஸ் ஆகியவற்றின் பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் நாட்டம் காண்பித்திருந்தனர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகளின் மீது இவர்களின் நாட்டம் அதிகம் காணப்பட்டது.
 
செவ்வாய்க்கிழமை
சுட்டிகள் மறைபெறுமதியில் நிறைவடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் ஆக்சியாடா மற்றும் டிஸ்டிலரீஸ் போன்றவற்றின் மீதான விலைக்குறைவு இதில் பங்களிப்பை செலுத்தியிருந்தன. புரள்வு பெறுமதி 1.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சுவிஸ்டெக், ரேணுகா ஹோல்டிங்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வலிபல் பவர் எரத்னா, லங்கா ஐஓசி மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் வலிபவர் பவர் எரத்னா பங்குகள் விற்பனையில் அதிகளவு ஈடுபாட்டை பதிவு செய்திருந்தனர்.
 
புதன்கிழமை
கொமர்ஷல் வங்கி, லங்கா ஐஓசி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர்பெறுமதியை பதிவு செய்திருந்தன. புரள்வு பெறுமதி 2.1 பில்லியன் ரூபாயை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஐஓசி மற்றும் செலான் வங்கி (வாக்குரிமையற்ற பங்குகள்) மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், சணச அபிவிருத்தி வங்கி மற்றும் சுவிஸ்டெக் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. மேலும், கலப்பு ஈடுபாடு என்பது டோக்கியோ சீமெந்து, எம்ரிடி வோல்கர்ஸ், வலிபல் பவர் எரத்னா மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
 
வெள்ளிக்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2.5 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் ஆக்சியாடா மற்றும் சிஐசி ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல், ரேணுகா பூட்ஸ் மற்றும் எஃப்எல்சி ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. மேலும், கலப்பு ஈடுபாடு என்பது லங்கா ஐஓசி, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.  
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் லங்கா ஐஓசி, ஸ்டான்டர்ட் கெப்பிட்டல், எஸ்எம்பி லீசிங் (சாதாரண), சொஃப்ட்லொஜிக் மற்றும் அபான்ஸ் ஃபினான்ஷியல் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
ஹியுஜே, செரன்டிப் என்ஜி கோர்ப்., மிரமர், ப்ளு டயனமன்ட் (சாதாரண) மற்றும் கொத்மலே ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



 
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,900 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.38 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 210.30 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X