2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கடலட்டைகளுடன் மூவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

மன்னார் - சௌத்பார் கடற்பகுதியில், நேற்று (12) 55 கடலட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து கடலட்டைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட டிங்கி -1, ஓ.பி.எம் - 1, ஓக்ஸிஜன் சிலிண்டர்கள் - 5 என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்படட சந்தேகநபர்கள் 25, 27, 28 வயதுடையவர்களெனவும் அவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பொருள்களுடன், மன்னார் கடறறொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .