2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்லத்துக்கு கட்டுமான உதவி தேவை

Administrator   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்லத்தின் அதிகரித்த சிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறுவர் விடுதி மற்றும் கற்றல் மண்டபம் உடனடியாக தேவையாக உள்ளது. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலுள்ள அன்புள்ளங்கள் மேற்படி கட்டடங்களின் உட்கட்டுமானத்துக்கான உதவிகளை வழங்க முன்வரவேண்டும்' என கிளிநொச்சி மாவட்ட முன்னாள் செயலரும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவருமான தி.இராசநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சனிக்கிழமை(10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'319 மாணவர்களுடன் இயங்கக் கூடிய மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தற்போது 406 சிறுவர்கள் தங்கியுள்ளனர். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம் பெண்களுக்கான விடுதியை அமைத்துத் தந்துள்ளார். தற்போது மாணவர்களின் அதிகரித்துள்ளதால் விடுதி மற்றும் கல்வி மண்டபம் தேவையாகவுள்ளது.

எனவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள அன்புள்ளங்கள் மேற்படி மண்டபங்கள் அமைப்பதற்கான உதவிகளை மனமுவந்து வழங்க முன்வரவேண்டும்.

கடந்த ஆண்டில் 8 மாணவர்கள் மகாதேவா சிறுவர் இல்லத்தூக்கூடாக பல்கலைக்கழக அனுமதியை பெற்றுகொண்டனர்.
இரண்டு மாணவர்கள் பட்டயக்கணக்காளர் கல்வியை மேற்கொள்வதுடன் முகாமைத்துவபட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X