Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம், வவுனியா கந்தசுவாமி வீதியில் நேற்று முன்தினம் (28) திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தின் பெயர்ப்பலகையை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரனும் கட்சி அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமரனும் திறந்து வைத்தார்கள்.
இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். R
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026