2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நவம்பர் 7க்குள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ள அரசியல் கைதிகளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சனிக்கிழமை (17) மாலை சென்ற மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், அரசியல் கைதிகளுக்கு பால், பழம் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஜனாதிபதியின் கோரிக்கையை அரசியல் கைதிகள் ஏற்று, அவர்கள் முன்னெடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  கைவிட்டுள்ளனர். இது தொடர்பில், நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள்  நல்ல முடிவு கிடைக்கும் என்று அரசியல் கைதிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு, சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்' என்று அவர் கூறினார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக சிவில் அமைப்புக்கள் ஆகியவை இணைந்து அவர்ளுடைய ஒத்துழைப்ப வழங்க முன்வரவேண்டும். இனங்களுக்கிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாக, ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X