Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார்.
இதன்போது, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, 25 பயிலுனர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் புனர்வாழ்வு ஆணையாளரால் வழங்கி வைக்கப்பட்டன. விசேடமாக இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலில் கால்களில் காயப்பட்டு நடக்க முடியாத போராளி ஒருவருக்கும் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், சர்வ மத குருமார்கள், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, கேணல்சித்திர குணதுங்க, கடற்படை அதிகாரிகள், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர் எஸ் சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago