Editorial / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று, வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்த போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த சம்பவத்தில் பார்த்தீபன் நிதர்சன் (06) மற்றும் மாரிமுத்து மணியம் (84 ) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026