Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும், கலைஞருமான “மக்கள் காதர்” என அழைக்கப்படும் எம்.ஏ.காதர், தனது 75ஆவது வயதில், இன்று (10) காலை காலமானார்.
நீண்ட நாட்களாகச் சுகவீனமுற்றிருந்த அவர், நேற்றுக் காலை உயிரிழந்த நிலையில், அன்னாரின் ஜனாசா, மன்னார் - மூர் வீதியில், இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல வருடங்களுக்கு முன்னர், “மக்கள்” எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியதால் அவர், “மக்கள் காதர்” எனும் சிறப்புப்பெயரைப் பெற்றுக்கொண்டார்.
பத்திரிகை நிரூபராகவும் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த இவர், தனது கருத்துகளைத் துணிந்து தெரிவிக்கக்கூடியவராக இருந்து வந்ததால், பல அச்சுறுத்தல்களுக்கும் ஆளானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025