Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, இன்று (23) காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும், நன்னீர் மீன்பிடித்தலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், சூடுவெந்தபுலவு பகுதஜயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், அவர்களிடம் இருந்து 150,000 ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும் கூறினர்.
28 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
58 minute ago