Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - நைனாமடு பகுதியில், நேற்று (23), புதையல் தோண்டிய 6 பேரை, புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மரக்காரம்பளை, ஓமந்தை, நெடுங்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் இவ்வாறு 39, 40, 42, 44, 46,56 வயதுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினமிரவு 11.30, மணியளவில், நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில், 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த 6 பேரையும் கைதுசெய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, மண்வெட்டி, பூஜைப் பொருள்கள், மோட்டார் சைக்கிள், ஓட்டோ என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
49 minute ago
2 hours ago