2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்துக்களை தவிர்க்க உதவுமாறு மக்கள் கோரிக்கை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - அக்கராயன் பிரதான வீதியின் புதுமுறிப்பு குளத்துக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள இரு பாலங்களின் அருகே ஆபத்தான குழிகள் காணப்படுவதனால் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயநிலை காணப்படுகின்றது.
 
கிளிநொச்சி - புதுமுறிப்பு ஊடாக அக்கராயன் செல்லும் பிரதான வீதியின் புதுமுறிப்புச்சந்திக்கு அண்மித்த பாலத்தின் அருகே பாரிய குழி காணப்படுவதுடன், வீதியும் மிக ஒடுங்கியதாகவே காணப்படுகின்றது. மிக ஆபத்தான நிலையில் குறித்த பகுதி காணப்படுவதனால், இதன் ஊடாகப்பயணிக்கும் வாகனங்களும் பொதுமக்களும் பெரும் விபத்துக்களை எதிர்கொள்ளும் நிலைகள் காணப்படுகின்றன. அத்துடன், இதற்கருகிலுள்ள மற்றுமொரு பாலமும் மிக ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
 
ஆகவே, இந்தப்பகுதி மக்கள் மீள்குடியேறி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் இந்த வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாமல் உள்ளது.

இவ்வாறான வீதிகளை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .