Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
ஆட்டக்காரி நெல்லினத்துக்குப் பதிலான சிவப்புநிற நெல்லினம் கிளிநொச்சி மாவட்டத்தில் இல்லையென விவசாயிகளினால், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் இம்முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டக்காரி நெல்லினம் நோய்களை உருவாக்கக்கூடிய நெல்லினம் என்பதினால் அதனை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை.
ஆட்டக்காரி நெல்லினத்துக்கு பிரதியீடான 400-6 நெல்லினம் விதைக்கப்பட்டால் அறுவடை செய்ய நான்கரை மாதம் ஆகும்.
எனவே, காலபோக நெற்செய்கையில் அவற்றினைப் பயன்படுத்தமுடியாது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கென மூன்றரை மாத சிவப்பு நெல்லினத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிகளை உருவாக்கித்தரும்படியும் விவசாயிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago
49 minute ago