2025 ஜூலை 09, புதன்கிழமை

'கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரவை வேண்டும்'

Gavitha   / 2016 நவம்பர் 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் மேய்ச்சல் தரவைகள் இன்மையால், கால்நடை வளர்ப்பாளர்கள், தங்களது கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்கு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அக்கராயன்குளத்தின் கீழ், 4,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்கராயன்குளத்தின் கீழ் 5,000 வரையான கால்நடைகள் உள்ளன. இவற்றுக்கான மேயச்சல் தரவையொன்றை உருவாக்கித் தருமாறு, கடந்த காலங்களில் இடம்பெற்ற விவசாயக் குழுக் கூட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று, கால்நடை வளர்ப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னைய காலங்களில் காணப்பட்ட மேய்ச்சல் தரவைகள், உவர் நிலமானதும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதும், தற்போது மேய்ச்சல் தரவைகளுக்கான புதிய நிலங்கள் இனங்காணப்படாமையும் இந்த நெருக்கடிக்கு காரணமாகவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .