Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
யுத்தம் மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 66 பேருக்கான மாதாந்த உதவித் தொகை வழங்கும் நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை (28) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், கழுத்துக்கு கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடுப்புக்கீழ் பாதிக்கப்பட்ட 55 பேரும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்ட 11 பேரும் இந்த உதவி தொகையை பெறுகின்றனர்.
வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், து.ரவிமோகன், மருத்துவ கலாநிதி சி.சிவமோகன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி எஸ்.பூங்கோதை, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியதிகாரி மருத்துவ கலாநிதி எஸ்.சத்தியரூபன், மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் ந.தசரதராஜகுமாரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
17 minute ago
28 minute ago