2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்தில் இராணுவத்தினர் இருவர் படுகாயம்

George   / 2015 மே 06 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தொண்டமான் நகர் ஏ – 9 வீதியில் செவ்வாய்க்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.

இரணைமடுப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர், வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதியதுடன் எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடனும் மோதியுள்ளனர்.

படுகாயங்களுக்குள்ளான இருவரும் முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .