2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேராளார் மாநாடு

Thipaan   / 2015 ஜூலை 01 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வியை ஜனநாயக மயப்படுத்துவதற்கு என்னும் தொனிப்பொருளிலான 58ஆவது பேராளர் மாநாடு கடந்த வாரம் மன்னார் அல் அஸார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டதுடன், பாடசாலைகளில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பில் அவை தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்தும் அதிபர்களுடன் ஆராயப்பட்டது.

நாட்டின் தற்போதைய நிலையும் அதன் சமகால நிலையை தீர்மானிக்கும் வகையிலான ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வும் இந்தமாநாட்டில் இடம்பெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .