Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
George / 2015 ஜூலை 02 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் 36 வீதமான நிலப்பரப்பு இராணுவத்திடம் இருக்கின்றது. அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதாநகர், பரவிப்பாஞ்சான், இரணைமடு, மலையாளபுரம் உள்ளிட்ட பகுதி;கள் அடங்கலாக மாவட்டத்தின் 36 வீதமான நிலப்பரப்பை இராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்திருக்கின்றது.
இதனால் இந்தக் காணிகளில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றபோதும் இந்த நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் தயாராக இல்லை. இதனை விடுவித்து எமது மக்கள் சொந்த நிலங்களில் குடியேறுவதற்கும் அவர்களது வாழ்வாதாரத் தொழில்களை செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago