Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
George / 2015 ஜூலை 03 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடமாகாணத்துக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து அமைக்கப்பட்ட ஆராம்ப சுகாதார பரபமரிப்பு நிலையங்கள் மற்றும் தாய்-சேய் மருத்துவ நிலையம் ஆகியவை இன்று வெள்ளிக்கிழமை(03) காலை வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தத போதும், மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த நிலையத்தை திறக்க அக்கிராம பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வடமாகாணத்துக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டாரவெளி ஆராம்ப சுகாதார பரபமரிப்பு நிலையமும் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட உயிலங்குளம் ஆராம்ப சுகாதார பரபமரிப்பு நிலையம் மற்றும் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட எருக்கலம்பிட்டி தாய்-சேய் மருத்துவ நிலையம் ஆகியவை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வுகளில் வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, அயூப் அஸ்மின், றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ் , வடமாகாண சுகாதார சுதேச சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜீட், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி அன்ரன் சிசில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக, 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆராம்ப சுகாதார பரபமரிப்பு நிலையத்தை திறக்க வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
எனினும் அங்கு ஒன்று கூடிய அக்கிராம பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ; இல்லாமல் குறித்த நிலையத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அங்கு கூடிய பெண்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறுpத்த நிலையம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலே திறக்கப்படும் என கூறிய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
1 hours ago