2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் த.தே.கூ.வின் தேர்தல் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஜூலை 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், ரெமேஸ் மதுசங்க

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கலந்துரையாடலில் இன்று திங்கட்கிழமை (06) ஈடுபட்டது.

வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது மற்றும் கூட்டமைப்பு கட்சிகள் ஒற்றுமையாக எவ்வாறு பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .