2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆனைவிழுந்தானுக்கு பஸ் சேவை நடத்துமாறு கோரிக்கை

George   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சேவையின் பஸ் சேவை நடத்தப்படவேண்டும் என ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் தற்போது சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் போக்குவரத்துச் சேவை இல்லாத நிலையில் வெளியிடங்களுக்கான தொடர்புகள் அற்ற நிலையிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய பயணிக்க முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

போக்குவரத்துச் சேவை இன்மையால் இந்தக் கிராமத்திலுள்ள மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பில் மீள்குடியேற்றப்பட்ட 2010ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தமது கோரிக்கையை விரைந்து நிறைவேற்றும்படியும் கிராம அபிவிருத்திச் சங்கம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .