2025 ஜூன் 25, புதன்கிழமை

தள்ளாடி விபத்தில் இருவர் காயம்

George   / 2015 ஜூலை 18 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் சனிக்கிழமை(18) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொதுவைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் வாகனமே இவவாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

மன்னார் பொதுவைத்தியசாலையில் இருந்து கழிவுகளை, தள்ளாடி வீதியூடாக கழிவுகளை கொண்டுசென்று கொண்டிருந்த போது தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் குறித்த பௌசர் வாகனம் வேகக் கட்டுப்பட்டை இழந்த நிலையில் வீதியோரமாக குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .