Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 23 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால் (டோலர்) மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதாக மன்னார் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை (23) வரையான நான்கு தினங்களுக்குள் மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் டோலர் படகுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
பேசாலை, பள்ளிமுனை, கோந்தப்பிட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்களில் பலர், இழுவைப்படகுகள் மூலமே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய மீனவர்களும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து டோலர் படகுகள் மூலமாகவே மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள், வாரத்தில் மூன்று தினங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பலகமுனைப்பாடு, தாழப்பாடு, மிரானாப்பாடு ஆகிய கடற்பகுதிகளில் வலைக்கப்பட்டுள்ள மீனவர்களில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் வலைகளை தொடர்ச்சியாக சேதப்படுத்தப்படுகின்றன.
இதனால் பணங்கட்டிக்கோட்டு, எருக்கலம்பிட்டி, விடத்தல் தீவு ஆகிய கிராம மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக மன்னார் பணங்கட்டிக்கோட்டு கிராம மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு பணத்தைப் பெற்றும், வங்கிகளில் கடனைப்பெற்றும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை கொள்வனவு செய்து மீன் பிடிக்க கடலில் போட்டால், இழுவைப்படகுகள் இவ்வாறு அவற்றை சேதப்படுத்துகின்றன என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடு செய்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago