2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இளைஞன் மீது கத்திக்குத்து

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா - யாழ். வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்படத்தில் நின்ற இளைஞன் மீது முச்சக்கரவண்டியில் வந்த சிலர் கத்திக்குத்தை மேற்கொண்டதில் அவ்விளைஞன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 100 மீற்றர் தூரத்துக்கும் குறைவாக பொலிஸ் காவலரண் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .