2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றின் முன்பாக 'ஹோன்' ஒலிப்பிய சாரதிக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நீதிமன்றின் முன்பாக  ஒலியெழுப்பிய  (ஹோன்) சாரதிக்கு 3,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை  செய்யப்பட்டு சாரதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாகனம் செலுத்திச் சென்ற ஒருவர் நீதிமன்றின் முன்பாக ஒலியெழுப்பியது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (22) ஆஜர்படுத்தியதையடுத்து அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .