2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், தாழ்வுபாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று நேற்று செவ்வாய்கிழமை (04) கரையொதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 

தலை, கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கபட்டு உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியுள்ளமையினால் ஆணா?பெண்ணா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லையென மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சடலத்தை நேற்று இரவு 9 மணியளவில் மன்னார் பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம், தற்பொழுது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .