2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணாமல் போனோர் விவகாரம்; ஐ.நா.வுக்கு கடிதம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி செபமாலை அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழு, யாழ். மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு காணாமல் போனோரின் உறவுகளை தேடும் சங்கம் ஆகியன இணைந்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளருக்கு இந்த கடிதத்தை இன்று அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக நம்பகத்தன்மையற்ற உள்ளக விசாரணையினையில் நம்பிக்கை இல்லை எனவும் அதனால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செபமாலை அடிகளார் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .