2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விடிவுகாலம் நெருங்குகிறது: விஜிந்தன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமை  போராட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கு அங்கத்தவர்கள் எமது இலக்குக்கு எதிராக இருந்து தேசத்தை காட்டிக்கொடுத்தார்கள். இவர்களுடன் இணைந்து அரசியல் நடத்துவதற்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  நான் இணைந்துக்கொண்டேன் என முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் கே.விஜிந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து  தெரிவிக்கையில்,

தமிழ் பிரதிநிதித்துவத்தை அடையாளப்படுத்தும் முகமாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் நான். வன்னி மக்களுக்கான விடிவுகாலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.  

இந்தத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வேட்பாளராக நான் போட்டியிடுவதை எல்லோரும் அறிவீர்கள்.  அதன் மூலம் வன்னி மக்களின் வருங்காலத்தை வசந்த காலமாக்க வேண்டும். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டதுடன் பல தொழில்வாய்ப்புக்களையும் வழங்கினார்.இவரது வளர்ச்சியையும்,ஆதரவையும் பொறுத்துக்கொள்ளாத சிலர் திட்டமிட்டு இருமுறை தேர்தல் பிரசாரங்களின் மீது  தாக்குதல் நடத்துகின்றனர்.

எமது இலக்கு கற்ற சமூக சிந்தனை உள்ள சமூகம் உருவாக வேண்டும், எமது சமூகம் என்றும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .