Freelancer / 2023 ஏப்ரல் 13 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. R
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago