Princiya Dixci / 2017 ஜனவரி 23 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனது சித்தத்துக்கு உறக்கமே இல்லை. உறங்கும் வேளையிலும், அது என்னோடு பேசும். விழித்துக்கொண்டால் உலகை இரசிக்கும். இன்ப துன்பங்கள் சாரா வண்ணம், எல்லாம் இறை எனக் கருதும் சிறுவன்.
நோக்கத்துடனேயே உலகத்தில் உயிர்கள் பிறக்கின்றன. காரண காரியம் அறிந்துகொண்டால், எல்லா மாந்தரும் சித்தர்கள்தானே! புத்தியும் அறிவும் ஞானத்தை மிஞ்சிடாது. அன்போடு வாழ்ந்தால், அகிலத்தை அசைக்கலாம்.
இன்பத்துக்கு இடையூறு நாங்களே. துன்பத்தைத் துடைக்க விருப்பமில்லாது, பித்தராகிப் பல வழி தேடுபவர். “கடவுளே” என்பர், பின்னர் அவரைத் தூற்றுவர்.
கடவுள் இலவசமாய் ஈந்திடும் பரம்பொருள். கரத்தை ஏந்துங்கள்; சரம் சரமாய் அருள் மழை பொழியும். மனம்குளிர ஆன்மா ஆனந்தக் கூத்தாடும்.
பரதேசி ஒருவனின் சுயதரிசனம் இது!
வாழ்வியல் தரிசனம்: 23/01/2017
பருத்தியூர் பால. வயிரவநாதன்
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026