Princiya Dixci / 2017 மார்ச் 07 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுட்டித்தனமாகச் செயல்களைப் படு உற்சாகமாகச் செய்யும் குழந்தைச் செல்வங்களை அடக்கி ஒடுக்க முற்பட வேண்டாம்.
அவர்களின் புத்திசாலித்தனமான வேலைகளை, அதன் அழகைக் கண்டு இரசியுங்கள்.
ஆனால், அதே சமயம் அவர்களின் உடலுக்கு ஊறு விளையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கவே அவர்கள் மிகவும் பிரியப்படுகின்றார்கள்.
தாங்கள் தொந்தரவு இன்றிப் பொழுதுபோக்காகக் குழந்தைகளின் குறும்பை இரசிக்காமல் அவர்களை வைது கொள்ளுதல் மிகவும் தவறாகும்.
இன்று பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரின் பாராமுகத்தினாலேயே பிஞ்சு வயதில் நெஞ்சம் வருந்தித் தங்கள் வாழ்வின் திசையை மாற்ற எத்தனிக்கின்றார்கள்.
பாசத்தை, நேசத்தை பரிவுடன் காட்டிட சற்று நேரத்தை அவர்களுக்கு ஒதுக்குக.
உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்.
வாழ்வியல் தரிசனம் 07/03/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026