Janu / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொரலந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு சொந்தமான விவசாய நிலமொன்றில் இந்தக் கொலை நடந்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago