2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நல்லதை பெற தயக்கம் வேண்டாம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஞ்சம் எதனை மனமார விரும்புகிறதோ, அப்போதுதான் எமது தேகமும் திருப்தியும் வளமும் பெறுகின்றது.  

ஆயினும், இந்த மனம் நியாயபூர்வமானவற்றை மட்டுமே, பூரணமாக ஏற்கும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

அதுபோலவே உடல்கேட்கும் எல்லா இச்சைகளுக்கும் உட்பட எண்ணுதலும் தீய விளைவுகளையே தரும். இந்த உடலும் மனமும் சில சமயங்களில் எமது தகுதிக்கும் மேலானதையும் கேட்டுத் தடுமாற வைக்கும். 

நல்ல நிலையில் உள்ளவர்கள்கூட, அற்ப விடயங்களில் புலனைச் செலுத்தி அதனை அடைய முயலும் போது, அவப்பெயரைக் கேட்பதுண்டு.  

கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் அனுபவித்தாலென்ன என எண்ணுவதே சுயநலத்துடன் கூடிய மமதையாகும்.  

எது நல்லதோ அதனை நியாயபூர்வமாகப் பெறத் தயக்கம் காட்ட வேண்டாம். 

வாழ்வியல் தரிசனம் 30/01/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .