Princiya Dixci / 2017 ஜனவரி 03 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
போருக்கான ஆயுதங்களையும் மது உற்பத்திகளையும் நிறுத்தினாலே போதும் உலகில் வறுமை, பசிப்பிணி அறவே அகல்வதுடன் நிரந்தர சமாதானமும் ஏற்படுவது உறுதியாகும்.
நோய்களை உற்பத்தியாக்கி அதற்கான நவீன மருந்துகளைத் தயாரிப்பது, நவீன வியாபாரக் கொள்ளையடிப்பை உலக வர்த்தகம் செய்துகொண்டிருக்கிறது.
நோய்களற்ற உலகை இயற்கையான வழியில் தடுக்காமல் நச்சு மருந்துகளூடாக மக்களுக்குத் திணிப்பது உலக அநியாயத்தின் உச்சமாகும்.
இப்படியிருக்க, நாடு செழிக்க வேண்டும் எனக் கோஷமிடுவது எம்மை நாமே ஏமாற்றுவது போலாகும். நவீனம் என்னும் பொய்மையைக் கண்டபடி ஏற்றால் உலகமே நோயாளியாகி விடும்.
ஏழ்மை, துன்பம் இல்லாமல் ஒழிக்க வழியுண்டு. தீயநோக்கான முழு அரசுகளின் செயற்பாடுகள் நசுக்கப்படல் வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 03/01/2017
பருத்தியூர் பால – வயிரவநாதன்
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026